Saturday, June 27, 2015

ஷிர்டி சாயீ பஜன்.


 ingu ungal paadal ketkalaam. raakam.theva gandhari.

இனியா காவியக்கவி இயற்றிய பாடல் இது.

இதை முதலில் மோகன ராக சாயலில் பாடினேன்.

அற்புதமான கவிதை இது.

இதை இன்னொரு ராகம் தேவ காந்தாரி , அதிலும் பாட மனம் விழைந்தது.

இனியாவுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சாயியின் மகிமை அறியவும்
அவர் அருள் வேண்டும்.

இங்கேயும் இந்தப் பாடல் ஒலிக்கிறது. 

வரும் 
வழியில் ,
தமிழ் வலையில் 
நான் கண்ட பின்னோட்டம் இது. சாரி, பின்னூட்டம். 
நான் எழுதியது அல்ல.  எந்த பதிவுக்கு ? என்றும் சரியாக நினைவுக்கு வரவில்லை. 


  கண்ணால் காணாத ஒரு ஆலமரத்தை ஒரு விதையைக் காட்டி அதற்குள் மறைந்திருப்பதாய்ச் சொன்னால் எப்படி நம்பக் கடினமானதோ அப்படிப்பட்டதுதான் அவரின் இருப்பும். 

மஹா சமுத்திரத்தில் காய்ச்சாமல் கோடி கோடி டன்களாய் மறைந்திருக்கும் உப்பைக் கண்ணால் காணமுடியாது- அதன் சுவையை நாக்கால் உணர்ந்தாலும். தீவட்டியின் துணையோடு ஒரு பொருளைத் தேடுவது போல 

ஞானத்தினால் அந்த குணங்களைத் தேடுகிறோம். தேடியது கிடைத்தபின் தீவட்டியின் துணை தேவையில்லை.

 இல்லை, கிடைக்காது, முடியாது போன்ற வார்த்தைகளை விட உண்டு, கிடைக்கும், முடியும் என்ற வார்த்தைகள் தரும் உற்சாகமும், நம்பிக்கையும் அளவிடற்கரியவை. 

நாம் தேடுவது எது, எதற்காக என்பதன் விஸ்தீரணத்துக்கு ஏற்ப அந்தப் பயணம் முடிவடைகிறது அல்லது நீள்கிறது. 

 என் சொற்ப அனுபவத்தில் இருப்பதிலேயே விற்பதற்கு மிகக் கடினமான பொருள் ஆயுள் காப்பீடு தான். கண்ணால் காணமுடியாதது என்பதாலேயே அதன் அருமை யாருக்கும் அத்தனை எளிதில் புரியாது.



 அன்பு,பரிவு,மன்னிப்பு,நன்றி பாராட்டுதல், பசி நீக்குதல் இன்னும் இதுபோன்ற பல மேன்மையான குணங்களை யாரெல்லாம் ப்ரதிபலிக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கடவுள். 

 நாம் இருவரும் ஒரே கருத்தைத்தான் சொல்லவருகிறோம் அப்பாதுரை. உண்டு என்று நான் துவங்குகிறேன். இல்லை என்று நீங்கள் துவங்குகிறீர்கள். 

நாமிருவரும் சந்திக்க நேரும் புள்ளியில் இருவரிடமும் அந்த இரு வார்த்தைகளும் கூட உதிர்ந்துபோய் விடும் நிலையில் தரிசிக்கும் அனுபூதிதான் அந்த மறைபொருள்
 *************************************************************************

அநுபூதி என்ற சொல்லுக்கு 
கந்தர் அனுபூதியிலே அருணகிரி நாதர் சொல்வதை 
நன்றியுடன் நினைக்கிறேன்.  ( நன்றி: கௌமாரம் .காம்.)

 உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.

......... பதவுரை .........

உல்லாச ... மங்காத உள்ளக் களிப்பும்,

நிராகுல ... துன்பமற்ற நிலையும்,

யோக ... யோக சொரூபனும்,

இத ... நன்மை பயப்பவனும்,

சல்லாப விநோதனும் ... அடியார்களிடம் இனிமையாகவே பேசி
திருவிளையாடல் புரிபவனும்,

நீ அலையோ ... நீ தானே முருகா,

எல்லாம் அற ... உரை அவிழ உணர்வு அவிழ உயிர் அவிழ,

என்னை இழந்த நலம் ... நான் எனும் ஜீவ போதம் இழந்து
அனுபவிக்கும் பேரின்ப நிலையை,

சொல்லாய் ... மற்றவர்களுக்கு நீயே எடுத்துச் சொல்லவேண்டும்.

......... விளக்கவுரை .........

சகல பற்றுகளையும் கடந்த நிலையை 'எல்லாம் அற' என்று
குறிப்பிடப்படுகிறது. இதில் அகப் பற்று, அதாவது உயிர் மேல்
வைத்திருக்கும் பாசம், புறப் பற்று, என்னுடைய இல்லம் 'என்னுடைய
குடும்பம்' முதலிய உலக பசு பாச தொந்தங்கள் அடங்கும். இவை
நீங்கினவுடன் நான் .. எனது என்னும் ஜீவ போதத்தை இழந்து
இறைவனுடன் கலந்து நீவேறெனாதிருக்க நாவேறெனாது இருக்கும்
நிலை அடைந்து, ஜீவன் முத்தி நிலை அடையப்பெற்றால் அந்த
அனுபவத்தை வாய் விட்டு கூற இயலாது.

   .. வாய் விட்டு பேச ஒண்ணாதது ..

.. என்கிற 'வாசித்துக் காணொணாதது' (பாடல் 561) திருசிராப்பள்ளி
- திருப்புகழ் அடியைக் கவனிக்கவும்.

மற்றுமொரு யோகக் குறிப்பும் இதில் காணலாம். அநுபூதி நிலையை
முருகன் அருளால் அடையப்பெற்று மறுபடியும் ஜீவ நிலைக்கு திரும்பி
வரும்போது வாய் பேச முடியாது. பேச்சு திரும்புவதற்கு சில நாட்கள்
ஆவதை சித்தர்களின் வரலாற்றில் காணலாம். எப்போதும்
உள்ளக்களிப்புடன் இருப்பவனும், துன்பம் சிறிதும் இல்லாதவனும்,
எல்லாவித பேறுகளையும்பெற்று அவாப்த சமஸ்த காமனாய்
இருப்பவனும், அடியார்களுடன் மகிழ்ச்சியுடன் சம்பாஷித்துக்
கொண்டிருப்பவனும், பல லீலைகளை புரிபவனும் நீதானே முருகா?
ஆதலால் உன் அருளால் எனக்குக் கிடைத்த இந்தப் பேரானந்த
நிலையை நீயே அனைவருக்கும் எடுத்துக் கூறவேண்டும்.

 

Wednesday, June 24, 2015

விடைகொடு .....

தமிழ் வலைப் பதிவுகளில் புரியாத ஒன்று :

ஒரு இடுகை  தமிழ் இலக்கணத்துக்கு உட்பட்ட உரைநடையா அல்லது வழக்கு அல்லது வட்டார /பேச்சு மொழியின் பிரதிபலிப்பா  என்று திடமாக சொல்லிட முடியாது என்பதே.

உரைநடை என்றால் எப்படி இருக்கவெண்டும் என்று ஆங்கில இலக்கியத்தில் பலர் கடந்த 2 அல்லது 3 நூற்றாண்டுகளில் பல்வேறு கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் , அவர்கள் சொன்னதெல்லாம், தமிழ் இலக்கியத்திற்குப்பொருந்துமா என இருமொழி வல்லுநர் எவரேனும் தான் சொல்ல இயலும்.

எந்தப்பொருளையும் விளக்க, விரித்துச்சொல்ல, பயன் படுத்தப்படும் இலக்கண சுத்தியுடன் கூடிய வாக்கியங்களே உரை நடை எனப்படுவது ஆகும். எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்றும் மூன்றும் இருக்கவெண்டும். குறைந்தது எழுவாய் பயனிலை ஆவது இருத்தல் அவசியம் என்பர்.

அந்தக்காலத்தில் எனது தமிழ் ஆசிரியர் சொல்வார் :
(நீ) எழுவாய், செயல் படு (இல்லையேல்)  பொருள் இல்லை.என்று நினவு வைத்துக்கொள்ள ஒரு acronym ஆக சொல்வார்.

எந்தப்பொருளையும்பற்றியும் உரை நடை இலக்கியம் இருக்க இயலும். எந்தப் பொருளையும் என்று சொல்லிவிட்டதால், முதல் ஃ  வரை எது வேண்டுமானாலும், நிசமோ, கற்பனையோ, கதையாக, கட்டுரையாக, பெருங்கதையாக, வசன காவியமாக இருக்கலாம்.

இன்று படித்தது சீனு அவர்களின் கட்டுரை ஒரு அழகான உரை நடைக்கு ஒரு உதாரணம் .
அவரது வலை   திடங்கொண்டு போராடு

  தலைப்பு :


விடைகொடு என் ஏர்டெல் ஏகாதிபத்தியமே...

+Srinivasan Balakrishnan

அவர் எழுதியதெல்லாம் ஒரு கைப்பேசி பற்றியே.

 அவருக்கு ஏற்பட்ட சுகத்தை, சோகத்தை, எதிர்பார்ப்பை, அதிர்வுகளை, அச்சங்களை, அவர்தம் நண்பர்களின் சிபாரிசுகளை  அழகாகவே வர்ணித்து இருந்தார்.

ஒரு சிறிய கைக்குள் அடங்கிய ஒரு பொருளை இமயப் பிரச்னை போல வர்ணிக்கும் திறன் சீனுவுக்கே கை வந்த கலை .

படித்து முடித்தபின்  , அந்த இடுகையில் கண்ட விடை என்னும் ஒரு சொல் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருந்தது.

விடை என்ற சொல்லுக்கு எட்டு வகை பொருள் உளது என நன்னூல் கூறும்.

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

(நன்னூல் - 386)

 இது தவிர, தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளன. சங்க கால இலக்கியத்தில் காணப்படும் பல சொற்களின் பொருள் இன்று காணப்படுதல் அல்லது உணரப்படுதல் கடினம்.

உதாரணம் : இந்த விடை என்ற சொல்லுமே.




தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!


 விடை என்ற சொல்லுக்கு காளை மாடு, அல்லது எருது என்றும் பொருள் கொள்ளலாம்.

ஒருவனைப் பார்த்து எருமை மாடு என்றால், வழக்கப்பொருள் என்னவெனின், நாம் என்ன செய்யச்சொன்னாலும் செய்யாது சோம்பேறியாக காலம் தாழ்த்துபவன் எனப் புரிந்து கொள்கிறோம்.

நிற்க. 

ஏர் டெல் காரர்களும் அவ்வாறு தான் . என்ன நாம் கரடியாகக் கத்தினாலும் அவர்கள் விதியே வேறு. நம் விதியை நொந்துகொண்டு நம்மை விட்டால் போதும் என்று ஓடுவதைத்  தவிர வேறு வழிஇருக்கிறதா எனத் தோன்றவில்லை.

சென்ற மாதங்களில் ஒரு போஸ்ட் பைட் சிம்மை நான் ப்ரி பைட் ஆக மாற்ற 
நான் பட்ட பாட்டினை இங்கு விவரித்தால் அது கம்ப ராமாயணத்தில் அசோக வனச் சீதை கதை போல் இருக்கும்.  அவர்கள் கேட்ட எல்லா தொகைகளையும் ஐ.டி. போடோ எல்லாவற்றையும் கொடுத்த பின்னும் அவர்களிடமிருந்து எனக்கு போஸ்ட் பைட் கட்டண அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. நான் போடாத கால்களுக்கு கட்டணம். மாத வாடகை ரூபாய் 350 எப்படியும் செலுத்தவேண்டும் என்கிறார்கள்.  அவர்கள் சொல்லும் காரணம் அந்த ஆண்டவனுக்குத்தான் புரியும். ஆண்டவனே உச்ச நீதி மன்றத்துக்குச் சென்றாலும் இன்று அங்கு இருக்கும் கூட்டத்தில் பெருமாளுக்கு நீதி கிடைக்க பத்து வருடங்கள் ஆகும். 

 எனவே,விடை கிடைக்காது என்ற தோன்றியதால், எது கிடைக்கும் என்று பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் ஒரு பின்னூட்டம் இட்டேன்.

பின்னோட்டம் இடுகையில், இந்த "விடை " எனும் சொல்லை வைத்துக்கொண்டே ஒரு பத்து வரிகள் எழுதினேன்.

விடை கொடு ஏர் டெல் ஏகாதிபத்தியமே !!

டவர் இல்லாத காரணத்தால் ஏர் டெல் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை.

அதே சமயத்தில், நடுவில், ஏதோ ஒரு டவரின் மேல் உட்கார்ந்து இருக்கும் சிவபெருமான்,
உங்கள் குரல் கேட்டு ,
எனக்கு செல்லிட்டு சொன்னார்:
,

அது என்ன உங்க பிரண்டு கோரிக்கை சரி இல்லையே என்றார்.

அது என்ன அவர் கோரிக்கை உங்களால் தீர்கமுடியாதது என்று வினவினேன்.

நான் அமர்ந்திருக்கும் ஒரே வாகனம் விடை.
அதை கொடு என்றால் எப்படி ?


நியாயம் தான் என்றேன்.

அவரை ஒன்று செய்யச்சொல். என்றார்.

சரி என்றேன்.

அவர் ஆபீஸ் விட்டு வரும் வழியில் க்ரோம்பேட் இருக்கிறது.

ஆம். ஆண்டவா.

அதனருகே நங்க நல்லூர் என்றொரு புண்ணியதலம் இருக்கிறது.

ஆம். அங்கே யாருனாச்சும் ஏர் டெல் ஜி.எம். இருக்காங்களா?

குறுக்கே  பேசாதே. (எங்க அம்மா சொல்லியிருப்பது நினைவில் வந்தது. சிவனுக்கும் நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது என்று )


சரி .

அந்த தலத்தில் , ஆஞ்சனேயர் இருக்கிறார்.

ஆமா.அங்கே சென்றால் ??

வடையாவது கிடைக்கும்.

என்று சொல்லி மறைந்தார். அந்த தோடுடைய சிவபெருமான். 

விடையேறியவன்.
சுப்பு தாத்தா.
www.subbuthathacomments.blogspot.com


*******************************************************************************************

Tuesday, June 23, 2015

குதித்தோடி வா

வானதிப் பதிப்பகத்தார் வா வா என
எமை அழைத்து இதைப் படித்துப்பார்,சுவைத்துப்பார்
 என்று சொல்கிறார்கள் என்று தெரியுமுன்னே,

தமிழ் வலை உலக பிரபல பதிவர் எனது நண்பர் பால கணேஷ் அவர்கள், வலை நண்பர்கள் எல்லோரும் நீங்கள் பெருங்காலம் எழுதாது இருப்பது எம்மை எல்லாம் வலிக்கச் செய்கிறது என்று சொல்லி,

முக்கியமாய் சீனு அவர்கள், வேண்டிக்கொண்டதன் பலனாக,

நரசிம்மா அவர்கள் எழுதிய நாவல் பஞ்ச நாராயணக் கோட்டம்
அதிலுள்ள அத்தனை பக்கங்களையும்
சிறப்பெனவே சமன் செய்து சீர் தூக்கிப் பார்த்து, காய்தல் உவத்தலின்றி, விருப்பு வெறுப்பு தவிர்த்து, நூலின் அருமை குறித்துத் தம் வியப்பையும் எடுத்துக்காட்டி, நாம் 

எல்லோரும் புகழும் வண்ணம் ஒரு விமர்சனம் எழுதி உள்ளார் என்பதை இந்த தாத்தா சொல்லி எல்லோருக்கும் தெரியவேண்டியது இல்லை.

அதைப் படித்த அந்த நாவல் எழுத்தாரரே அதற்கு நன்றி நவிலும் நோக்குடன் ஒரு கடிதம் எழுத அதையும்  பால கணேஷ் அவர்கள் பிரசுரித்து இருக்கிறார்.

இந்தக் கடிதம் வருமுன்னமேயே ஒரு பின்னூட்டம் அளித்த சுப்பு தாத்தா
எப்பவும் போல வாங்கிக்கட்டிக்கொள்ளுவோம் என்று நினைத்தே எழுதிய பின்னூட்டமும் பாலகணேஷ் தந்த பதிலும் இதுவே:
 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
.
முதலில் சுப்பு தாத்தா பின்னூட்டம்:


வயசான காலத்துலே கண் சரியா தெரியல்லையா..
அதுனாலே...
அசப்பிலே
சங்க தாரா அப்படிங்கறதை
நயன தாரா ன்னு படிச்சுட்டு, இன்னாடா
இந்த அம்மா கதை, கட்டுரை, நாவல் ன்னு கூட
எழுத ஆரம்பிசுட்டாகளா அப்படின்னு தோனிச்சு..

அப்பறம் தான் கவனிச்சேன்..சங்கத்தாரா அப்படின்னு..

சங்கத்தாரா அப்படி ஒரு ஸ்ரீ லங்கா பேட்ஸ் மேன் இருந்தாரு.

இது வேறவா இருக்கும்.

புத்தகம் கீதா அம்மா கிட்ட கேட்டா கொடுப்பாங்க...வாங்கி படிக்கணும்.

ஆனா, உங்க விமர்சனம் படிச்சதே நாவல் படிச்ச திருப்தி வந்துடுச்சு.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை தின்று பார்த்தால் போதுமில்லையா.

ஒரு நல்ல விமர்சனம் கிடைக்க அந்த நரசிம்ம கொடுத்து வைத்து இருக்கவேண்டும்.

நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.//
நரசிம்ம மட்டும் இல்லை. பதிவுலகில் பல பேர் இந்த குறிப்பைக் கவனித்தால் நல்லது.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
ReplyDelete\
பால கணேஷ் அவர்கள் பிரியமுடன் பிரியாணி சாப்பிடும்போது என் பின்னூட்டத்தைப் பார்த்திருப்பார் என்று தோன்றுகிறது
Replies


  1. நீங்களாவது பரவால்ல சுப்புத்தாத்தா. நான் பிரியாணிங்கறதக் கூட பிரியாமணின்னு படிக்கிறவனாக்கும். ஹி... ஹி.. ஹி... சங்கத்தாரா இல்ல இலங்கை பேட்ஸ்மேன், அவர் சங்ககாரா. என் விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

    அடுத்து நூலாசிரியரிடமிருந்து வந்த கடிதம். அதற்கு பால கணேஷ் அவர்கள் விளக்கம்.
நூலாசியரியர் ஆங்கிலத்தில் எனக்கு எழுதி பிரசுரிக்கக் கோரியிருக்கும் கடிதம் இங்கே....

பாலகணேஷ், உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. உங்கள் கருத்துரை இல்லாமல் என் நாவல் முழுமை பெற்றிருக்காது. நான் வியப்புற்றேன். நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர், நான் ஏன் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதும் அறிந்தவர். என் முன்னவர்களைப் போல் வர்ணனைகளுடன் எழுத என்னாலும் இயலும் எனினும் தமிங்கிலீஷ் பேசும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள சிரமப்படுவார்கள் என்பதால்தான் எளிய தமிழில் எழுதுகிறேன் என்பதைத்தான் என் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன். இன்றைய தலைமுறை சரித்திரம் படிக்க வேண்டுமென்பதற்காக நான் கைக்கொண்டுள்ள எழுத்து நடை இது. என் முன்னுரையில் நான் எனக்கு முந்தைய எழுத்தாளர்கள் எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என்னைத் தெரியாததால் தவறாகப் புரிந்து கொண்டு சாண்டில்யனை நான் குறிப்பிட்டதாக எழுதி மற்றவர்கள் என்னை விமர்சிக்கும்படி ஆகிவிட்டது. ஆனால் நீங்கள் என்னையும் என் எண்ணங்களையும் அறிவீர்கள். என் சீனியர்களைப் பற்றி எழுதுவதன் மூலம் நான் புகழ்தேடிக் கொள்ள முயல்கிறேன் என்று என் புத்தகத்தையும் முன்னுரையையும் படிக்காதவர்கள்கூடக் கூறும்போது அயற்சியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. உங்களுக்கு என் திரையுலகப் பின்னணி தெரியும். நான் புகழை விரும்பியிருந்தால் என் அப்பாவுக்கு உதவியாகத் திரையுலகில் நுழைந்து அதை எளிதாகப் பெற்றிருக்க முடியும். நமது முன்னோர்களின் பெருமையை அறியாதிருக்கும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள விரும்பியே சரித்திரத்தில் நான் கவனம் குவித்து எழுதி வருகிறேன். புகழ் வெளிச்சம் படாத மனிதனாக இருக்கவே விருப்பம்.
என் வேலைப்பளுவின் காரணமாகவும், என் புத்தகத்தைக் கூடப் படிக்காமல் விமர்சிப்பவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என் எழுத்தைச் சோர்வுறச் செய்வதாலும் நான் வருடத்திற்கு ஒரு புத்தகம்தான் எழுதி வருகிறேன். உங்கள் தளத்தில் என் எண்ணங்களையும் என் மூத்த எழுத்தாளர்களை நான் எத்தனை மதிக்கிறேன் என்பதையும் வெளியிடவும். வானதி பதிப்பகத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது திரு.கல்கி ராஜேந்திரன், திருமதி.சிவசங்கரி மற்றும் நான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டோம். நான் மூத்தவர்களை அவமதிப்பவனாக அறியப்பட்டிருந்தால் என் பக்கத்து இருக்கையில் கல்கி ராஜேந்திரன் அவர்கள் அமர்வாரா?
எதுவாயினும் உங்களின் விமர்சனம் சிறப்பானது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சென்ற நாவலை நான் குறைத்தன் காரணமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ஒற்றுப் பிழைகள் நேர்ந்திருக்கலாம். தங்கள் அறிவுரைக்கு நன்றி. உங்களின் ஆதரவு வரும் நாட்களிலும் எனக்குத் தொடர்ந்து கிட்டுமென நம்புகிறேன். நன்றி.
Reply

Replies


  1. நரசிம்மா சார்... உங்களை நான் நன்கு அறிவேன். இலக்கண சுத்தமான, வர்ணனைகள் நிறைந்த தமிழில் என்னாலும் எழுத முடியும் என்று குறிப்பிடாமல் உதாரணமாக ஒரு பாரா நீங்கள் எழுதிக் காட்டியதால் எழுந்த நெருடல் அது. அதைப் படிக்கும் மற்றவர்களுக்கு நெருடல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே உங்கள் விளக்கம் வேண்டி அதை இங்கே குறிப்பிட்டேன். அனைவருக்கும் தெளிவாக உங்கள் மனதை இப்போது புரிந்திருக்கும் என்பது என்னைப் பொறுததவரை நல்ல விஷயம். உங்களை வருத்தப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இரண்டுமே பெருந்தலைகள்.அந்த இடத்தில்
சின்னப் பையன் பொடியன் சுப்பு தாத்தாவுக்கு என்ன வேலை?
இருந்தாலும் சுப்பு
தாத்தா அடிக்கும் ஜால்றாவைக் கேளுங்கள்.

நரசிம்மா அவர்களின்
கருத்துரையே ஒரு
அறுசுவை உண்டி போல
அழகுறத் திகழ்கிறது.

சற்று காரமும் இருக்கிறது.
சுவையான கனி தரும்
இனிப்பும் இருக்கிறது.
சிந்தனைக்கு ஓர்
விருந்தாக இருக்கிறது.


அடுத்த சில நிமிடங்களில்,
டிஸ்கவரி பாலஸ் போகவேண்டும்.
நரசிம்மா எழுதிய நாவலில், அதுதான்,
பஞ்ச நாராயணக் கோட்டத்தில் ஒரு
பாஞ்ச் வரியாவது
இன்றே படிக்கத்துவங்கவேண்டும்.

ஒவ்வொரு எழுத்தாருக்கும்
ஒரு பாணி ஒரு தனித்துவம் உண்டு.
இருப்பினும்,
ஓரிரு இடத்தில் இன்னொருவரை
நினைவு படுத்துதல் என்பதும் இயற்கை தான்.

ஒரு சினிமாவோ அல்லது பாடலோ பார்க்கும்போது அல்லது
கேட்கும்போது,
இன்னொரு சினிமாவில் கண்ட காட்சியோ அல்லது
கேட்ட டியூனோ நினைவு வருவது இல்லையா ??


அது போலத்தான்.

சுப்பு தாத்தா.


*******************************************************************************

அடுத்து,
தமிழகத்தின் கவிக்குயிலாய்ப் போற்றப்படும் சசிகலா அவர்களது கவிதையை
எனக்கு முன்பே புலவர்கள் இராமானுஜம், பாரதி தாசன் அவர்கள் சிலாகித்து பாராட்டி எழுதினாலும்,
சசிகலா அவர்களின் உயிர்த் தோழிகள் , நண்பர்கள் பலர் பாராட்டி மகிழ்ந்து விட்டாலும் ,
நன்றாக இருக்கிறதே, என்று ஒரு இரு சொல்லில் பின்னூட்டத்தை முடித்துக்கொள்வாரா சுப்பு தாத்தா ?

குயில் பாட்டு கேட்டிடவே குதித்தோடி வா ..எனத் துவங்கும் இந்தப் பாடல் .

+சசி கலா 

நான் பாடட்டுமா என்று வினயமுடன் கேட்க,
பாடுங்கள் என்று அவர்களும் அனுமதி தர,
அவையினிலே பாடுகிறோம் என்று பெருமிதத்துடன் பாடுவது
இசைச் சிறுவன் சுப்பு தாத்தா.



பாட்டு பாடும்போது நீங்கள் தாளம் போட்டால் அந்தப் பெருமை
மேடம் சசிகலா அவர்களுக்கே  சொந்தம்.

Wednesday, June 17, 2015

அப்பாவும் மகளும். அப்பப்பா !!!

இன்னிக்கு அப்பா மகள் ஒருவருக்கு ஒருவர் ரிலேஷன்ஷிப் அதாவது
உணர்வு பூர்வமான உறவு முறை எப்படி இருக்கிறது என

ஒரு கதை மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
+Subbiah Veerappan
எனது வலை நண்பர் ஜோதிடர் திரு சுப்பையா அவர்கள். அவரது வகுப்பறை என்னும் வலைக்குச் சென்று உடன் இங்கே சென்று அந்தக் கதையை படியுங்கள்.

அதைப் படித்து விட்டு சிரித்து சிரித்து சிரிப்பதை நிறுத்த முடியாமல், உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் சுப்பு தாத்தா பொறுப்பல்ல.

இன்னொரு அப்பாவும் மகளும் இங்கே .  அப்பப்பா
நமக்குத் தெரிந்தவர்கள் தான்.

அன்புள்ள அப்பா

Monday, June 15, 2015

கருப்பை வெள்ளையாக மாற்றும்

வணக்கம் தாத்தா பாட்டி நலம் தானே!
இம்முறை பாடல் இன்னும் அழகாக வந்திருக்கிறது தாத்தா எப்படி நான் நன்றி சொல்வேன் என்று தவிக்கிறது மனம். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மிக்க நன்றி உங்கள் கருணைக்கு. பைந்தமிழ் என்னில்ஓர் பாகமா


 இதைப் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன். இதை சுப்பு தாத்தாவின் குரலில் கேட்க ஆசையாக உள்ளதாக ஊமைக்கனவுகள் viju வும் கேட்டிருந்தார்.

 எனக்கும் ஆசையாக உள்ளது.

 (click above.) கிளிக்குங்கள் மேலே )

நான் vacation ல் நிற்கிறேன் அமெரிக்காவில்

அதனாலேயே தாமதம். குறை நினைக்க வேண்டாம். மேலும் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். இப்படிக்கு இனியா

 இனியா

 sury Siva 7:53 AM (1 minute ago) to Iniya

 மேடம் இனியா அவர்களுக்கு, வணக்கம். 
உங்கள் கருத்துக்களை அவ்வப்போது பார்க்கும் காலையிலே நீங்கள் சென்னையிலோ அல்லது நம் தமிழகத்தின் எங்கோ ஒரு ஊரில் இருப்பதாகத்தான் நினைப்பேன். நீங்கள் தங்களை ஏழ் கடலுக்கும் அப்பால் இருப்பதாகக் குறிப்பிட்ட பொழுது நான் நினைத்தேன்.எண் திசைகளில் நம் தமிழ் மக்கள் வாழ்ந்திடினும் அவர்களை எங்கனம் தமது தமிழ் ஒரு வட்டத்தக்குள் இல்லை ஒரு கோட்டுக்குள் அதுவும் இல்லை ஒரு புள்ளிக்குள் நிறுத்துகிறது, அது மட்டும் அல்ல, அவர்கள் உள்ளங்களை அத்தமிழ் கவிதைகள் இசையின் நமது பாரம்பரிய இசையில் மயங்கச் செய்கிறது என்பதை .நினைந்து கண்கள் பனிக்க உருகி நிற்கிறேன். தமிழ் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு அதுவும் மரபுக் கவிதைகளை அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்புக்கள் பல தங்களைப் போன்றவர்களுக்கே அதிகம் உள்ளன. ஒரு இராமனுஜம், ஒரு பாரதிதாசன், மட்டும் இப்பணியில் பாடு படுகின்றனர். அவ்வப்போது அன்பர் சிவகுமாரன் பணியும் போற்றத்தக்கதே. ஆயினும் இவர்கள் மட்டும் போதாது. ஒரு தமிழினமே இதற்கான தொண்டைச் செய்யவேண்டும். நிற்க. தங்கள் கவிதைகள் எப்பொழுதுமே சொற்சுவை பெரிதும் கொண்டவை. தாங்கள் சாயி கவிதைகள் எழுதி அவற்றினை பாடியபொழுது நான் பெற்ற இன்பம் சொல்லிட இயலாது. இன்னும் எழுதுங்கள். உங்கள் பணி தொடர, சிறக்க , வான் அளாவி நின்று புகழ் பெற உங்களுடன் இறைவனின் ஆசிகள் என்றும் இருக்கும். நன்றி. சுப்பு தாத்தா. சொற்குற்றம், பொருட்குற்றம் பொறுத்திட வேண்டும்

. இவருக்காக நான் பாடிய பாடல் இதோ.  

துவக்கத்தில் பகுதாரி . முடிகையில் பாமினி 

இளைய ராஜா, இசை ஞானி அவர்களின் பாடல், 
பார்த்த விழி பார்த்த இடம்.பாடல் நினைவு இருக்கிறதா.
அற்புதமான பாடல். குணா என்னும் படம். 
கமல் சாரின் அற்புத நடிப்பு.

பாடலின் இறுதி பாக்கள். பாமினி @ கும்பினி எனும் ராகத்தில் உள்ளது. 

http://soundcloud.com/meenasury/iniyaamerica


அடுத்து, 

குழல் இன்னிசை பதிவு. 
பதிவர் யாதவன் நம்பி எனவும்
புதுவை வேலு எனவும் வளைய வரும் சொல் வள்ளல் பதிவாளர் அவர்களது 

வெண்ணிலவு கவிதை நான் தேஷ் ராகத்தில் பாடினேன்

Sunday, June 14, 2015

அப்பாதுரையின் "ஜீன்ஸி ராணி"

அப்பாதுரையின் " ஜீன்ஸி ராணி"
 சக்தியின் அவதாரம்.
 +Durai A
ஜான்சி ராணி யைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஜீன்ஸி  ராணி என்று பெயர் சூட்டி ஒரு சக்தியை போற்றும் வகையில்
ஒரு பதிவு படித்தேன்.

நேற்று, நடு நிசிக்கு சற்று முன்னே

என் வலை நண்பர் திரு .ஏ .துரை எனும் அப்பாதுரை அவர்களின் பதிவில்
ஒரு இடுகை கண்டேன்.

முதல் படிப்பிலே எனக்கு அதில் உப்போ உரைப்போ இருப்பதாக உறைக்கவில்லை .  நிகழ்ந்தது, வர்ணிக்கப்பட்டது,இன்றைய சமூகத்தில் மனித அன்றாட வாழ்விலே நடக்குமோர் நிகழ்வு  போல் தான் தோன்றியது.

கருத்துக்கள் இல்லை
என்ற இறுதி சொற்றொடர் அதுவரை அந்த இடுகைக்கு ஏதும் கருத்துகள், பின்னூட்டங்கள் பதியப்படவில்லை என உணர்த்தியது.

அப்போதைக்கு , எனக்கும்  ஒரு கருத்தும் இல்லை. என்பது உண்மைதான்.
ஆயினும் , முதல் கருத்து எனதாக இருக்கப்போகிறது என்றதால் அதை பார்த்து, நானும்,

//கருத்து இல்லை //
எஸ்.
என்று,
கருத்திட்டேன்.

எனக்கு அந்த நேரத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் ஏதும் இல்லை . உண்மைதான்.

ஆதவன் இன்று பிறந்தான்.

 +Dindigul Dhanabalan
இன்று காலை கணினியைத் திறந்தபின்,
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எனது வலைப்பதிவுக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு என்னை எங்கோ ஒரு பதவியில் அமர்த்தியது மட்டுமன்றி,

எனது அன்பு நண்பர் திரு அப்பாதுரை அவர்கள் வலையில்
ஒரு கருத்து இட்டு இருந்தார்.

எல்லா களேபரமும்  முடிந்தபின்  சக்தியின் அவதாரம்
 என 
இக்கருத்து அந்த பதிவின் உட்பொருளுக்கு எனை இழுத்துச் சென்றது. 


அந்தக் கருத்து  எனக்கு ஏற்புடைத்து என்பது மட்டும் அன்றி, எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் பல

காலம் கடத்தாது நான் ஒரு பின்னோட்டம் .அக்கருத்தை, பொன்.தனபாலன் அவர்கள் கருத்தை சிலாகித்து எழுதியிருந்தேன்.

அது இதுவே:

// எல்லாகளேபரமும்  முடிந்தபின்  சக்தியின் அவதாரம்//


உண்மை.
உயிரனம் தோன்றியதும் அதன்
ஒட்டு மொத்த பரிணாம இயல்பு வளர்ச்சியும்
இக்கருத்தை நிலை நிறுத்துகிறது.
எனர்ஜி இல்லாது மேட்டர் தண்டம்.
அது ஒரு கவர்ச்சிப்பொருள் ஆக துவக்கத்தில் இருக்கலாம்.
ஆனால், கவர் போய் விட்டால் சீ என்று தூக்கி எறியப்படும்
எந்தப் பொருளுமே
எத்தனை நாள் நினைவில் நின்று நிலைக்க இயலும் ?
ஆடம் இருந்து பிரயோஜனம் இல்லை என உணர்ந்த
ஆண்டவனும் அதனால் தானோ
இவளை இட பாகத்தினளை
ஈவ் ஆகப் படைத்திட்டனன்  போலும்.
உயிருக்கெல்லாம் ஊக்கத்துக்கேல்லாம்
எண்ணுக்கடங்கா ஏற்றங்களுக்கெல்ல்லாம்
ஐயமில்லை. ஒப்பிலாத
ஓங்காரமே அஃதே
எனர்ஜி இலாத மேட்டர் தண்டம் எனச் சொன்னேன்.
மேட்டர் இலாத எனெர்ஜி இருக்க இயலுமா?
இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக
அண்மையில் சில் ஆய்வுகள் எமை நம்பும் வகையில்
உண்மைகளை எடுத்துச் சொல்லுகின்றன.
சக்தி உள் இருப்பதால் அன்றி
சிவம் சவமே .
சக்தி இல்லையேல்
சந்ததிகள் இருக்க மாட்டார்கள் என்று கூட இல்லை.
சந்தியில் எப்பொருளும் திட நிலையில் அசைவற்ற நிலையில்
இருக்க இயலும்.
உண்மையில்,
சக்தி அசையச் செய்கிறது.
அமைதியைத் தருகிறது.
ஆனந்தத்தைத் தருகிறது.
இக லோக இன்பங்களை எல்லாம்
ஈகிறது.
அவ்வாறு இருக்கையில்,
பிரளயம் முடிந்து திரும்பவும்
தோன்றுதல் என ஒன்று
நிகழ்கையில்
சக்தியின் அவதாரம்
சத்யம், சிவம், சுந்தரம். 

சுப்பு தாத்தா.

 எழுதி முடித்தபின் அந்த மன நிலையில் இருந்து 
சற்று அத்திசையில் இருந்து மறுதிசைக் குச்செல்ல
பாடல் ஒன்று கேட்போம் என்று யூ ட்யூப் சென்றால்

அங்கும் ஒரு சக்தி அவதாரம்.

திருப்பூர் கம்பன் விழாவில், திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் உரை 
எனக்கு, 

ஒரு பெண்மணி தனது கருத்துக்களை எங்கனம் அழகாக, ஆணித்தரமாக, அவை அடக்கத்துடன், முன் வைக்கிறார்  என்பதை

வியப்புடன் பார்த்தேன். கேட்டேன்.

அந்த ஒளி ஒலி காட்டி , காணொளி, இங்கே இடுவதற்கு அனுமதி இல்லை.

ஆக, அதை இங்கே  சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

அருள் கூர்ந்து எல்லோரும் அந்த கானொளீயைக் கண்டு
ஒரு சக்தியின் சொல்வண்ணத்தை, சொற்த் திறமை தனை
கேட்டுப் பயனுறவேண்டும்.

அந்த மேடையில் மைக்கின் பெயரே சிவசக்தி.

பேசுவதும் அந்த சக்தி.யே.
*********************************************************************
அடுத்ததாக, நான் சென்றது எங்கள் ப்ளாக் வலைப்பதிவு.
அங்கே கண்ட நிழற்படம்.
இது எங்கள் பிளாக் ல் நான் பார்த்த படம்.

 படித்த கௌதமனின் வரிகள். 
கவலைப்படாதீங்க - கவிதை இலக்கண சுத்தமாக எல்லாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ நாலு வரி, உங்களுக்குத் தோன்றுவதை எழுதிடுங்க! 
                 
எல்லோரும் படித்து இன்புற (அல்லது துன்புற) வேண்டும். அம்புட்டுதான்! 
             +kg gouthaman 
 
கண்ட உடன் கவிதை எழதுங்கள் எனக்
கூவிட்ட கௌதமன் குரல் கேட்டு,
எழுதிய
ஏழு வாக்கியங்கள்.


என்ன நினைத்து எனை ஈன்றாயோ ?
ஏணிகள் பல காட்டி,
ஏற்றங்கள் பெற்றிட பனித்தாயோ !
சறுக்கி விழுந்தாலும்
சாதனைகள் புரியவேண்டி,
சுற்றும் இந்த சுழல் பாதையிலே
மாயக்காரனை மடியிலே வைத்தெனை
மயங்கி நிற்கச் செய்தாயோ !!

பள்ளி திறந்துவிட்டது.
அம்மா தரும்
பையும் புத்தகமும் பெற்றிடவே என்
கையைப் பிடித்துச் செல்.

என் செல்ல அம்மாவுக்கு.


சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

****************************************************************************

எனது இன்னொரு வலையில்
சுப்பு தாத்தா ஏதோ தேடப்போய் அவருக்கும் அவர் இல்லாளுக்கும்
இனியதோர் பனிப்போர்.

பார்க்க தவறாதீர்.
இங்கே கிளிக்கவும். 

நானும் என்னை மார்கெடிங் செய்யத் துவங்கிவிட்டேன். 
விதி யாரை விட்டது ???!!!




Thursday, June 11, 2015

வழி வலியாக மாறுகிறது.!!!


இன்று தான் கவனித்தேன்.

அவர் பெயர்

பொன். தன பாலன்.  அவரை நாம் அறிவது திண்டுக்கல் தனபாலன் என்றே.

பொன் போன்ற நல் உள்ளம் கொண்டவர் இதயம் தான் 
மண்ணில் உதித்தவர் எல்லோரும் போற்றிடும் 
விண்ணவருக்கும் பொருந்தும் 
வையகத்தாரை வழி நடத்தும் 
வள்ளுவத்தை 

தினந்தோறும் போற்றி மகிழும்.

நன்றி எனும் தலைப்பிலே அவர் இட்ட இடுகை என் இதயத்தை 
வென்று விட்டது என்று சொல்வினும் மிகையாகாது.

பத்து பாக்களுக்கும் பத்து விளக்கங்கள் . 
உத்துப் பார்ப்பவர்க்கு வழி காட்டும் விளக்குகள் .

படிக்கையிலே ஒரு வரி மட்டும் என்னை திருப்பித்திருப்பி மேலும் மேலும் படி,படி, படி என்று
அறிவுறுத்தியது.
+Dindigul Dhanabalan
வழி சில வேளையில் வலியாக மாறுகிறது.

வழி, வலி இந்த இரண்டு சொற்களையுமே பார்த்தேன்.

ஒன்றிலே இன்னொன்றும் இருக்கிறது.  வலி இல்லாமல் எந்த வழியும் இல்லை.

அந்த இடுகையிலே நான் இட்ட பின்னோட்டம் இதோ: 


உண்மைதான். இருப்பினும் வலி தராத வழி ஏதேனும் உண்டோ/

உடலை வருத்தி உழைத்து அதன் வழி கிடைக்கும் ஊதியத்தின் 
பலன்  மன அமைதி, உவகை,ஆனந்தம் எல்லாம் 
வலி தராத்  தொழிலில்  உண்டோ ?


மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

செல்லும் வழி நெடுகில் இடர்ப்பாடு கள்  வரத்தான் செய்யும். 

அந்த இடர்கள் தர இருக்கும் வலிகளை முன் நோக்கி அதற்கான  தீர்வுகளையும் தீர ஆலோசித்த பின் 

வள்ளுவன் வாய்மொழி யாம் 
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:429

என்ற குரளை நினைவில் இருத்தி, 
எந்த ஒரு செயலிலும் இறங்குவது நல்லது.


தாமரை வேண்டுபவன் சேற்றில் இறங்க வேண்டுமே என எண்ணிடலாமோ  ? முத்து எடுக்க நினைப்பவன் மூச்சு அடைக்க முடியுமா என ஐயப்பாடு கொள்வின் என்று தான் முத்து எடுப்பான் ?

 வலி வருமே என்ற அச்சப்படுபவள் 
 பிள்ளை பெற ஆசைப்படுவதும் சரியோ ?

எந்த ஒரு செயலிலும் 
ஆக்கமும் உண்டு.
அதிர்வும் உண்டு. 
ஆனந்தமும் உண்டு. 
ஆங்காங்கே 
ஆலகால விடமும் உண்டு. 

அதிகம் பேசிவிட்டேன்.

சுப்புத் தாத்தா.
பின்.குறிப்பு:
உங்கள் விளக்க உரை எளியவருக்கும் புரியும் வகையில் உள்ளது மெச்சத்தக்கது.  தொடரட்டும் உங்கள் பணி.
வாழ்க வளமுடன்.

****************************************************************
###############################################

அடுத்து,
இன்று என்னைக் கவர்ந்த இன்னொரு பதிவு.
+R.Umayal Gayathri
திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் இயற்றிய கிருஷ்ண கானம் 

க்ருஷ்ணப்பாவை என்னும் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

அது கிருஷ்ணனை நாம் அடையச்செல்லும் பாதை.

Courtesy:
http://www.bcagalleries.com/

இன்னும் சற்று நேரத்தில் அதையும் பாடி மகிழ்வேன்.







பாடலை இங்கேயும் கேட்கலாம்.


Wednesday, June 10, 2015

தென்றல்

தமிழ் வலை கவிஞர் சசிகலா அவர்கள் நேற்று எழுதிய தென்றல் வலைப்பதிவு பாடல் பிரமிக்க வைக்கும் படைப்பு ஆகும்.


அதைப்படிக்கும்பொழுதே பாடினேன் என்று சொல்வேன். எந்த இடத்திலும் எந்த தடங்கலும் வராது , முதல் வரிக்கு எந்த சந்தம் பொருத்தமானதோ அதுவே இறுதி வரை திடமாக இருந்தது.

சந்தத்துக்கு கட்டுப்பட்டு அதே சமயம் இனிமையாகவும் தெளிவாகவும், எளிதாகவும் எல்லோருக்கும் எளிதாய் புரியும்படியாகவும் இருப்பது சசிகலா அவர்களின் கவிதைகளே.

அதை படித்து, அதற்கு பின்னூட்ட பாராட்டு ஒன்றை கவிதை வடிவிலே இயற்றி பிரான்ஸ் நாட்டு கவிஞர் பாரதிதாசன் அனுப்பி இருக்கிறார். அதையும் நான் அதே ராகத்தில் பாடி மகிழ்ந்தேன்.

நான் பாடகன் அல்ல. ஒரு வாசகனே.எனக்கே தெரியும்.

இருப்பினும்
கவிதை என்றால் அதை படிக்கும் ஒவ்வொருவனையும்
பாடிடத் தூண்டுவதே ஒரு புலவனின் திறமை.

படிக்கும் எந்த வாசகனும் தத்தம் சூழ்நிலை மறந்து அந்தக் கவிதையிலேயே உள்ளம் நெகிழ்ந்து போவானாயின் அது தான் அவன் புலமை.

துவக்கத்தில் மரபு சாரா கவிதைகளை உருவாக்கிக் கொண்டு மகிழ்வித்த இவர், பிரான்ஸ் நாட்டு புலவர் பாரதி தாசன் அவர்களை தமது ஆசான் ஆகக்கொண்டுள்ளது இவரை
புதிய இலக்குடன், புதிய வேகத்துடன்
கவிதைகளைப் புனையத் தூண்டியுள்ளது  சொல்லலாம் . மிகையல்ல.



இது தமிழுக்கு இவர் சேர்க்கும் பெருமை.
இவரை வாழ்த்தி மகிழ்வது நமது கடமை.
********************************
*********************\

இன்று அமேரிக்காவில் இருக்கும் கவிதாயினி கவிநயா அவர்களின் செய்தி இதோ:

அன்பினிய தாத்தா,
அன்பான இனிய 74-வது பிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா! இன்னும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருந்து எல்லாருடைய பாடல்களுக்கும் மெட்டமைத்துத் தர அன்னை அருளட்டும்.
பாடல் அருமையாக இருக்கிறது, இடுகையில் சேர்த்து விட்டேன் தாத்தா. அன்பான ஆசிகளுக்கும் மிக மிக நன்றி.
அன்புடன்
கவிநயா

2006  ம் ஆண்டு முதல் இது நாள் வரையில்
 ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் 
அம்மனைப் போற்றி கவிதை எழுதி
 அதைத் தனது வலை 
www.ammanpaattu.blogspot.com
இல்
இட்டு வருகிறார்கள். இது வரை ஒரு வாரம் கூட இந்த 186 ஆண்டுகளில் தவறியது இல்லை.நானே ஆயிரத்துக்கு மேலான இவரது பாடல்களுக்கு இசை அமைத்து இருக்கிறேன். 

அன்னையைப் போற்றுவது, அவள் அடிகளைத் துதித்து அவள் சரண்  அடைவதையே ஒரே நோக்கு, இலக்கு ஆகக்கொண்ட  இவரது ஆன்மீக வலை 
அம்மன் பாட்டு ஆகும்.


நேற்று அவர் வலையில் எழுதிய பாடல் இதோ: 
விடையேறி வர வேண்டும்
சிவனோடு வர வேண்டும்

உடம்போடு உயிர் உறவு

அறும் முன்னே வர வேண்டும்!


உள்ளத்தில் வர வேண்டும்

உன்நினைவைத் தர வேண்டும்

ஊனுருக உன் புகழைத்

தினம் பாடும் வரம் வேண்டும்!


கரும்பினிய என் தேவி

காப்பாற்ற வர வேண்டும்

கறுத்திட்ட கண்டனுடன்

கடிதேகி வர வேண்டும்!


குருவாகி வர வேண்டும்

குறை தீர்க்க வர வேண்டும்

மறை போற்றும் மாதவியே

மறு(ற)க்காமல் வர வேண்டும்!
--கவிநயா 

 இந்த சுப்பு தாத்தாவை ஒரு பொருட்டாக மதித்து அவருடைய கருத்துகளுக்கு, பின்னூட்டங்களுக்கு தத்தம் வழிகளிலே இடம் தரும் 
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
எங்களது ஆசிகள்.


birthday wishes from google.

Tuesday, June 9, 2015

Ambal Adiyal

ambal adiyal paadiya paattu
www.rupika-rupika.blogspot.com

இன்று அம்பாள் அடியாள் அவர்கள் தனது வலையிலே இயற்றி இருக்கும் பாடலை என்னால் பாடாது இருக்க இயலவில்லை.

சொற்செறிவும் பொருட்செறிவும் ஒருங்கே இணைந்த இந்த பாடல்,
ஒவ்வொரு மனிதனும் மகாத்மா ஆக வழி ஒன்றை காட்டுகின்றது என்றால்
மிகையல்ல.

அம்பாள் அடியாள் அவர்களுக்கு எனது நன்றி.

இங்கேயும் பாடல் ஒலிக்கிறது. சொடுக்கினால் கேட்கலாம்.